தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க கிரேட்டர் சென்னை சார்பாக 28-12-23 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் பொருளாளர் திரு KM ரவி முதலியார் அவர்களின் தலைமையில் மங்கல குறிச்சி பகுதியைச்
சார்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவர் திரு AR லட்சுமணன் அவர்கள், கௌரவ தலைவர் முன்னாள் கிராம நிர்வாக அதிகாரி முருகேசன் அவர்கள், செயலாளர் திரு பால தண்டாயுதபானி அவர்கள், பொருளாளர் திரு பாலமுருகன் அவர்கள் துறைமுக திரு முருகேசன் அவர்கள் மற்றும் தாப்பாத்தி திரு விஜய் அவர்கள், கழுகுமலை திரு சிவகுருநாதன் அவர்கள், திரு L முத்து கிருஷ்ணன் அவர்கள், கீழ்நாட்டுக்குறுச்சி
திரு பிரபாகரன் அவர்கள்,மகளிர் அணி தலைவர் திருமதி S. கௌசல்யா அவர்கள் பொருளாளர் திருமதி
B. புவனேஷ்வரி அவர்கள், திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மற்றும் திருமதி பேச்சியம்மாள் அவர்கள் ஆகியோர் வெள்ள நிவாரணம் வழங்கும் பகுதிகளை தேர்வு செய்து சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.